மம்பட்டியான் - திரை விமர்சனம்
- Details
- Published on Friday, 16 December 2011 17:10
- Hits: 2935
மலையூர் மம்பட்டியான் என்றால் எண்பதுகளில் தெரியாதவர்கள் யாருமில்லை எனலாம் அந்த அளவுக்கு வெற்றி பெற்ற படம். இந்த படத்தின் மூலம் தியாகராஜன் புகழின் உச்சிக்கு சென்றார் என்பதை யாராலும் மறக்க முடியாது, அந்த கால கட்டத்தில் வழக்கமான கதைக்கு நடுவில் ஒரு புது முயற்சி என்பதால் ஒரு டிரென்ட் செட்டேராகவே இந்த படம் அமைந்தது.
ஆனால் அதே கதையை இன்றைய சூழலுக்கு தகுந்தவாறு மாற்றாமல் ,ஒரு உண்மை கதை என்பதால் அப்படியே ஆட்களை மட்டுமே மாற்றி எடுத்திருக்கிறார் தியாகராஜன், அதுவே வினையாகி போனது, படத்தின் கதை தெரியும் என்பதால் ,திரை கதையிலாவது புதுமையை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிச்சம்.
ராபின் ஹூட் கதை தான் ,தன் அப்பாவை கொன்ற பண்ணையாரை கொன்று விட்டு காட்டுக்குள் பதுங்கி கொள்ளும் மம்பட்டியான் ,பண்ணையார்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு தருகிறான் ,அவனை பிடிக்க வரும் போலீஸ் ஆகா பிரகாஷ் ராஜ் ,மம்பட்டியான் ஓடி கொண்டே இருக்கிறார் இவர் துரத்தி கொண்டே இருக்கிறார் ,தன் கூட்டாளியின் துரோகத்தால் இறக்கிறான். (இந்த ட்விஸ்ட் ஒரிஜினல் கதைக்கு பின்னாடி எத்தனை படத்தில் பார்த்தாச்சு) நடுவில் மம்பட்டியனுக்காக உயிரை விடுகிறார் முமைத்கான், வடிவேலுவை அவ்வளவுக்காக பயன் படுத்தவில்லை.
பிரசாந்த் விட்ட இடத்தை பிடிப்பது குதிரை கொம்பு ,உடம்பை கவனிக்க வேண்டும், மீரா ஜாஸ்மின் தனக்கு கொடுத்த பத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.
மற்றபடி மம்பட்டியானிடம் வேகம் இல்லை.
Share:












