மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் ருக்மணி!
- Details
- Published on Monday, 06 February 2012 15:03
- Hits: 231
தமிழ் திரையுலகில் ‘பொம்மலாட்டம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ருக்மணி விஜயகுமார். இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். தற்போது இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பத்திருக்கிறார்.
ருக்மணி ‘பொம்மலாட்டம்’ படத்திற்கு பிறகு ’ஆனந்த தாண்டவம்’ படத்தில் நடித்தார். பின்னர் படங்களில் நடிப்பதை விட்டு, தன்னுடைய முழு கவனத்தையும் நடனத்தில் செலுத்தினார். இப்போது மீண்டும் நடிக்க வருவது குறித்து கூறியதாவது:
“நான் மிகவும் எதிர்பார்த்த படம் ’பொம்மலாட்டம்’. அந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தேன். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வராத்தால், வேறு எந்த பட வாய்ப்பும் வரவில்லை. இதனால் சமீப காலங்களில், நடனத்தின் மீதுள்ள ஆசையால் என்னுடைய கவனம் அந்த பக்கம் திரும்பிவிட்டேன். உலகம் முழுவதும் சென்று நடன நிகழ்ச்சிகளை நட்த்திவிட்டேன். இப்போது மீண்டும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில கதைகளும் இயக்குனர்களிடம் கேட்டு வருகின்றேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டில் தெலுங்கில் ஒரு படமும், தமிழில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இனி நடனம் மற்றும் நடிப்பு இரண்டிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
Summary :
Beauty actress Rukmini who made her debut with ‘Bommalaattam’ is making her comeback again. The actress who proved her mettle with Anandha Thandavam has concentrated on her dancing skills. And now the buzz is that the actress is keen to continue her career. News is the actress is open to hear scripts from directors and film makers.
Share:












