இரண்டாம் பாகத்தில் உருவாகும் அஜீத், சூர்யா, விஷால் படங்கள்!
- Details
- Published on Tuesday, 21 February 2012 14:14
- Hits: 740
தற்போது கோலிவுட்டில் நடிகர்களின் சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பதில் மும்முரமாக இருக்கின்றனர் இயக்குனர்கள். அஜித்தின் ‘பில்லா’, சூர்யாவின் ‘சிங்கம்’, விஷாலின் ‘சண்டைக்கோழி’ ஆகிய படங்களின் 2-ம் பாகங்களை அப்படத்தின் இயக்குனர்கள் தீவிர வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த வரிசையில் அஜித்தின் “பில்லா-2” படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கிவருகிறார். படத்தின் ஷீட்டிங் முழுவதும் முடிவடையும் நிலையில் உள்ளது. சமீபத்தில் இணையத்தளத்தில் படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியிருக்கிறது. இப்படம் மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படத்தில், தற்போது சூர்யா நடித்து வருகிறார். இதன் ஷீட்டிங் அடுத்த மாதம் முடிவடைகிறது. இந்த படத்தை தொடர்ந்து “சிங்கம்-2” வில் சூர்யா நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
இதேபோல் விஷால், திரு இயக்கத்தில் ‘சமரன்’, சுந்தர்.சி இயக்கும் புதுபடம் என 2 படங்களில் படு பிஸியாக நடித்துவருகிறார். அதுவும் சுந்தர்.சி இயக்கத்தில் மூன்று வேடங்களில் அசத்த போகிறார் விஷால்.
Share:












