நாடகத்தில் வலம் வரவிருக்கும் பிரபல நடிகை!
- Details
- Published on Monday, 20 February 2012 14:03
- Hits: 218
தமிழில் ”தவமாய் தவமிருந்து” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுமானவர் நடிகை பத்மப்பிரியா. இதைதொடர்ந்து பட்டியல், சத்தம் போடாதே, பொக்கிஷம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நாடகத்தில் நடிக்க போவதாக கூறியுள்ளார் பத்மப்பிரியா.
பத்மப்பிரியா சினிமா துறைக்கு வருவதற்கு முன் நாடகத்துறையில் நடித்து கொண்டிருந்தார். சினிமாவில் நடிக்க வந்த பிறகு, நாடகத்தில் நடிப்பதற்கு எந்த வாய்ப்புகளும் வரவில்லை. மலையாள நடிகை ஆன் ஆகஸ்டின், இயக்குனர் வி.கே. பிரகாஷ், எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் குலூர் இவர்களுடன் பத்மப்பிரியா சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது இவர்களுக்கு மீண்டும் நாடகத்தில் நடிப்பது குறித்து பேசிக்கொண்டனர். இது குறித்து பத்மப்பிரியா கூறியிருப்பதாவது :
”நாங்கள் பேசியதிலிருந்து, சிறந்த நாடகங்களை தயாரித்து அவைகளை அதிகமான ரசிகர்களிடம் கொண்டு செல்ல போகிறோம். இதற்காக ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ் மற்றும் ஜெயப்பிரகாஷ் குலூர் ஆகியோரின் படைப்புகளை நாடகமாக்கியுள்ளோம்” என்று கூறினார்.
பத்மப்பிரியா தற்போது தமிழில் “தங்கமீன்கள்” பட்த்தில் நடித்துள்ளார். இதைதவிர மலையாளத்தில் நடித்துவருகிறார். மேலும் பல படங்களில் நடிக்க சிறந்த கதைகளைத் தேடி வருகிறார்.
Share:












